தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எந்த கட்சிக்கும் ஆதரவாக இல்லாமல் துணை ஜனாதிபதி பாரபட்சமின்றி, நியாயமாக செயல்பட வேண்டும்: சி.பி.ராதாகிருஷ்ணணுக்கு காங். வேண்டுகோள்

புதுடெல்லி: “துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் பாரபட்சமின்றி, நியாயமாக செயல்பட வேண்டும்” என காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள். அதேசமயம், நாட்டின் முதல் துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை துணைத்தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை காங்கிரஸ் உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறது.

Advertisement

1952 மே 16 அன்று மாநிலங்களவையின் தொடக்க நாளில் மிகவும் புகழ் பெற்ற தத்துவ ஞானி, கல்வியாளர், எழுத்தாளர், ராஜதந்திரியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், நான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. அதாவது இந்த அவையில் உள்ள ஒவ்வொரு கட்சியையும் சேர்ந்தவன். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயர்ந்த மரபுகளை நிலைநிறுத்துவதும், ஒவ்வொரு கட்சியிடமும் நியாயமாகவும், பாரபட்சமின்றியும், யாருடனும் விரோமின்றி, அனைவருக்கும் நல்லெண்ணத்துடன் செயல்படுவதும் எனது முயற்சியாக இருக்கும்.

அரசாங்கத்தின் கொள்கைகளை, எதிர்க்கட்சிகள் சுதந்திரமாகவும், நியாயமாகவும், வௌிப்படையாகவும் விமர்சிக்க அனுமதிக்கா விட்டால் ஒரு ஜனநாயக நாடு கொடுங்கோன்மையாக மாறி சீரழிந்து விடும் என்று சொன்னார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான் என்ன கூறினாரோ அதன்படி முழு உணர்வுடன் செயல்பட்டார்” என தெரிவித்துள்ளார்.

Advertisement