தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பல்கலை துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரால் தமிழக அரசுக்கு இடர்பாடு: உயர் கல்வித்துறை அமைச்சர் பேட்டி

Advertisement

மதுரை: மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் போதைப்பொருட்கள் இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி இன்று நடந்தது. இதனை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கலை அறிவியல், பொறியியல், கல்வியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2024-25ம் ஆண்டிற்கான பணியிட மாறுதல் பொது கலந்தாய்வை இணையவழியில் ஔிவுமறைவற்ற முறையில் நடத்த முதல்வர் உத்தரவிட்டார். இதன்படி, இணையவழியில் 377 ஆசிரியர்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, தகுதியான 198 பேருக்கு இன்று பணிமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. பல்வகை தொழில்நுட்ப கல்லூரியில் 285 மனுக்கள் பெறப்பட்டு, 93 பேருக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளையேற்று திறந்த மனதுடன், எந்தவொரு முறைகேடும் இல்லாத நிலையில், ஒளிவு மறைவற்ற வெளிப்படைத்தன்மையுடன் பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள் நியமனத்தை பொறுத்தவரை ஆளுநராலும், ஒன்றிய அரசாலும் எந்த வகையில் தமிழ்நாடு அரசுக்கு இடர்பாடு ஏற்படுகிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். சுமூகமான முடிவெடுத்து மாநில உரிமையை பேணி காக்க வேண்டும். அதன்படி அந்த பணிகள் எல்லாம் விரைவில் முடியும். மாநிலத்தில் ஆசிரியர், மாணவர்கள் நலன் பேணிக்காக்க வேண்டும் என்பதில் முதல்வர் கவனமாக இருந்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News