தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு பெருமை: பிரேமலதா

சென்னை: ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு பெருமை என பிரேமலதா தெரிவித்துள்ளார். நாட்டின் துணை ஜனாதிபதியாகவும், மாநிலங்களவை தலைவராகவும் இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவு பிரச்னையை காரணம் காட்டி திடீரென பதவியை ராஜினாமா செய்ததால், நாட்டின் 15வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement

இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளிடியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் ஒரு தமிழர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பெருமை. சவால்களை முறியடித்து அர்ப்பணிப்புப் பணியோடு உழைத்ததன் விளைவாகக் கிடைத்த மாபெரும் வெற்றி. உங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Related News