தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு!!

Advertisement

டெல்லி : ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்ற மழை கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடங்கிய 3வது நாளாக தொடர்ந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர், திடீரென திங்கள்கிழமை இரவு 9.30 மணிக்கு தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரின் பெயர்களை ஒன்றிய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் தமிழகம், பீகார் தேர்தலை மனதில் வைத்து பாஜக தேர்தல் வியூகத்தை வகுத்து பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான பணிகள் தொடங்கியதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாக்களிக்க உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் பட்டியலை தயாரிக்கிறது ஆணையம். தேர்தல் அதிகாரி, உதவி அதிகாரி யார் என தீர்மானிக்கும் நடவடிக்கையில் ஆணையம் இறங்கி உள்ளது. அத்துடன், முந்தைய துணை ஜனாதிபதி தேர்தல்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்து வருகிறது ஆணையம்.

இதனிடையே ஆளுங்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் பாஜக நிறுத்தும் துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மக்களவையில் 542 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 240 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர். இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்கு 427 பேர் உள்ளனர். எதிர்க்கட்சிகளுக்கு 355 பேர் உள்ளனர். மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 293 பேர், மாநிலங்களவையில் 134 உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சி கூட்டணிக்கு மக்களவையில் 249 பேர், மாநிலங்களவையில் 106 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 392 வாக்கு தேவைப்படும் நிலையில், பாஜக கூட்டணிக்கு 427 பேர் ஆதரவு உள்ளது.

Advertisement

Related News