தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

2வது முறையாக அபார வெற்றி: ராகுல் காந்தி நாளை வயநாடு வருகை.! எம்பி பதவி ராஜினாமா குறித்து அறிவிப்பு?

திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்வதற்காக ராகுல் காந்தி நாளை வயநாடு வருகிறார். அப்போது, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்வது குறித்த தகவலை அவர் வெளியிடுவாரா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பரபரப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். வயநாட்டில் 3.64 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை தோற்கடித்தார். இரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இதில் ஏதாவது ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வார இறுதிக்குள் இது தொடர்பான முடிவை நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்க அவர் தீர்மானித்துள்ளார்.
Advertisement

எந்தத் தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி தொகுதியை அவர் தக்க வைப்பார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடமும் இதையேதான் விரும்புகிறது. இதனால் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யலாம் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று கேரள காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் திருச்சூரில் தோல்வியடைந்த கருணாகரனின் மகன் கே. முரளீதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ராகுல் காந்தி நாளை (12ம் தேதி) கேரளாவுக்கு வருகிறார். மலப்புரத்திலும், வயநாடு மாவட்டம் கல்பெட்டாவிலும் அவர் வாக்காளர்களை சந்திக்கிறார். வாக்காளர்களை சந்திக்க வரும்போது ராகுல் காந்தி என்ன கூறுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராகுல் காந்தியை வரவேற்பதற்காக வயநாடு மற்றும் மலப்புரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடவையும் ராகுல் காந்திக்கு மகத்தான வெற்றியை கேரள வாக்காளர்கள் பெற்று தருகின்றனர். கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும் அமேதி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் தோல்வியடைந்த அவர், வயநாட்டில் 4.31 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement