தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வழக்கில் வரும் 30ம் தேதி தீர்ப்பு: குடும்பநல நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவியை காதலித்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த 2013ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து இருவரும் பரஸ்பரம் விவாகரத்துக்கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், இருவரும் முடிவெடுக்க 6 மாதங்கள் அவகாசம் வழங்கியிருந்தது.

Advertisement

அவகாசம் முடிவடைந்த நிலையில், குடும்பநல நீதிமன்றத்தில் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். அப்போது, நீதிபதியிடம் சைந்தவி, ஜி.வி.பிரகாஷ் தாங்கள் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் பிரிந்து வாழவே விரும்புவதாக தனித் தனியாக கூண்டில் ஏறி தெரிவித்தனர். அப்போது, உங்களின் பெண் குழந்தையை யார் கவனித்துக்கொள்ள போகிறீர்கள் என்று நீதிபதி இருவரிடமும் கேட்டார். குழந்தையை சைந்தவி கவனித்து கொள்ள தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விவகாரத்து கோரிய மனு மீது வரும் 30ம் தேதி தீர்ப்பளிப்பதாக கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

Advertisement