வேப்பூர் : கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். சிறுபாக்கத்தில் இருந்து நயினார்பாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் வடகராம்பூண்டியை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் இளங்கோவன் (57) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.