வெம்பக்கோட்டை அகழாய்வில் பெண் உருவ சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
Advertisement
வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வு பணியை கடந்த 18ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். தற்போது 3 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. இதில் ஒரு குழியில் நேற்று சுடுமண்ணால் வனையப்பட்ட பெண் உருவம் கண்டெடுக்கப்பட்டது. சிறிது சிதிலமடைந்த இந்த உருவத்தில் தலை அலங்காரமும், உதட்டுச் சிரிப்பும் மெருகூட்டுகிறது. கயல் வடிவில் கண்களும், அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள்ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
Advertisement