தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலுநாச்சியார் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியாரின் சிலையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் சேது.கருணாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: வீரம் என்ற வார்த்தைக்கு தமிழர் வரலாற்றில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் தான் எதிரொலிக்கும். சிறுவயதிலிருந்து வேலுநாச்சியாருக்கு தெரிந்த ஒரே மூன்றெழுத்து வார்த்தை வீரம். தெரியாத மூன்றெழுத்து வார்த்தை பயம்.

Advertisement

மருது சகோதர்களின் துணையோடு நவாப் படைகளையும், ஆங்கிலேயே படைகளையும் வென்று சிவங்கை சீமையை தனியொடு பெண்ணாக வென்றெடுத்தார். வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட மறுத்து அவர்களின் சூழ்ச்சியால் நாட்டையும், கனவனையும் இழந்தும் தன்னம்பிக்கை தளராமல் போராடி இழந்த மண்ணை மீட்டு இந்திய அளவில் விடுதலை போராட்டத்திற்கு வித்திட்ட முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார்தான் என்பதில் எப்போதும் தமிழ் மண் பெருமை கொள்கிறது.

இச்சிறப்புகள் வாய்ந்த வீரமங்கையின் சிலையை சென்னை காந்தி மண்டப வளாகத்தில் திறந்து வைத்து வீரமங்கை வேலுநாச்சியார்க்கும், தமிழ்மண் வீரத்திற்கும் பெருமை சேர்த்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்குலத்தோர் புலிப்படை சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Related News