தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பணியாற்றிய மனநல ஆலோசகர், ரவுடிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு சிறை பறவையாக செயல்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகளை நல்வழிப்படுத்துவதற்காகவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் `சீர்திருத்தத்தின் சிறகுகள்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒப்பந்த அடிப்படையில் மனநல ஆலோசகர் ஒருவரை நியமித்து கைதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
Advertisement

அதன்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலத்தை சேர்ந்த மனநல ஆலோசகர் அருணாச்சலம் (24) என்பவர் வேலூர் சிறையில் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவர் தினமும் வேலூர் சிறைக்கு வந்து கைதிகளிடம் மனஅழுத்தம் நீங்கவும், உடல் நல பாதிப்பு இன்றி வாழவும் ஆலோசனைகள் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி மனநல ஆலோசகர் அருணாச்சலம் சிறைக்கு வந்து சென்றார்.

பின்னர் அவர், கைதிகளுக்கு நெருக்கமானவர்களிடம் சில தகவல்களை தனது செல்போன் மூலம் தெரிவித்ததாக தெரிகிறது. இதையறிந்த சிறைத்துறையினர் அருணாச்சலத்தை ரகசியமாக கண்காணித்தனர். அவரது செல்போனில் இருந்து யார் யாரிடம் பேசி வந்தார்? எனவும் ஆய்வு செய்தனர். அதில், வேலூர் சிறை கைதிகளின் உறவினர்கள் மற்றும் ரவுடிகளிடம் அவர் பேசி வந்தது தெரிந்தது.

குறிப்பாக மனநல ஆலோசனை வழங்க சிறைக்கு சென்றவர், கைதிகள் கூறும் சில தகவல்களை சிறைக்கு வெளியே மற்ற ரவுடிகள் மற்றும் உறவினர்களிடம் பரிமாறி வந்துள்ளார். இதற்காக அவர் பணம் வாங்கினாரா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே இதுகுறித்து பாகாயம் போலீசில் ஜெயிலர் அருள்குமரன் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், கைதிகளிடம் இருந்து தகவல்களை பரிமாற்றும் சிறை பறவை போல செயல்பட்டு வந்ததும், ரவுடிகளுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததால் மனநல ஆலோசகர் அருணாச்சலத்தை போலீசார் நேற்றிரவு கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News