தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலூர் சைதாப்பேட்டையில் பல மாதங்களுக்கு பிறகு கழிவுநீர் கானாற்றில் தூய்மைபணி

வேலூர்: வேலூர் சைதாப்பேட்டை கழிவுநீர் கானாறு பல மாதங்களுக்கு பிறகு இன்று மாநகராட்சி பணியாளர்களால் தூர்வாரப்பட்டது. வேலூர் சைதாப்பேட்டை மலையில் இருந்து துவங்கும் மழைநீர் கானாறு தற்போது நகரின் ஒரு பகுதி கழிவுநீரை சுமந்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த கானாற்றில் மக்கா திடக்கழிவுகளை வீசுவதும், படுக்கைகள், தெர்மோகோல் பலகைகள், டியூப் லைட்டுகள், பாய், தலையணை ஆகியவற்றை மெயின் பஜார் மற்றும் அதை சுற்றியுள்ள விடுதிகளில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர்கள் கொண்டு வந்து வீசுவதும், அதனால் கானாறு அடைப்பட்டு தூர்ந்து கழிவுநீர் அருகந்தம்பூண்டி பகுதி மக்களின் வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்து அவர்களை அல்லல்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
Advertisement

இதனால் இந்த கானாற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தூய்மைப்படுத்த மாநகராட்சி முன்வர வேண்டும் என்று சைதாப்பேட்டை மற்றும் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஆண்டுக்கு ஓரிருமுறையே இந்த கானாறு தூர்வாரப்படுகிறது. அதன்படி, இன்று காலை வேலூர் மாநகராட்சி 2வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் சைதாப்பேட்டை கானாற்றை ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement