வேளச்சேரியில் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
Advertisement
சம்பவ இடத்திற்கு ராஜ்பவன் மின் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மர் மீது மணல் கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினரும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் டிரான்ஸ்பார்மரை குளிர்வூட்ட தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய ஊழியர்கள் போராடி சரி செய்தனர்.
Advertisement