தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளச்சேரியில் நேற்றிரவு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

வேளச்சேரி: வேளச்சேரியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மருது பாண்டியர் சாலை சந்திப்பில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு திடீரென டிரான்ஸ்பார்மர் வெடித்தது. சிறிது நேரத்தில், டிரான்ஸ்பார்மரில் இருந்து ஆயில் வெளியேறி கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அப்பகுதிமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
Advertisement

சம்பவ இடத்திற்கு ராஜ்பவன் மின் நிலைய ஊழியர்கள் விரைந்து வந்து மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் டிரான்ஸ்பார்மர் மீது மணல் கொட்டி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் அங்கு வந்த வேளச்சேரி தீயணைப்பு துறையினரும் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். மேலும் டிரான்ஸ்பார்மரை குளிர்வூட்ட தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், டிரான்ஸ்பார்மரை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்வாரிய ஊழியர்கள் போராடி சரி செய்தனர்.

Advertisement

Related News