தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஒட்டிய போலீஸ் வாகனங்களுக்கும் ரூ.500 அபராதம் விதிப்பு: வேப்பேரி போக்குவரத்து போலீஸ் அதிரடி

சென்னை: சென்னை பெருநகர காவல்துறை அலுவலக பார்க்கிங்கில் ‘போலீஸ் ஸ்டிக்கர்’ ஓட்டிய வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் தலா ரூ.500 அபராதம் விதித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் வாகன சட்டப்படி வாகனப் பதிவு எண் பலகைகளில் ஸ்டிக்கர்கள் ஓட்டி இருந்தால் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
Advertisement

தேவையற்ற ஸ்டிக்கர்களை ஒட்டி இருந்தால், அதை மே 1ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் மே 2ம் தேதி முதல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், மே 1-ம் தேதி கால அவகாசம் முடிந்ததால், மே 2ம் தேதி முதல் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் எல்லையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அந்த வகையில் வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையிலான போக்குவரத்து போலீசார் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாக பார்க்கிங்களில் நிறுத்தப்பட்டிருந்த காவலர்களின் வாகனங்களை திடீரென சோதனை செய்தனர். அப்போது ‘போலீஸ்’ என்ற வாசகம் ஒட்டப்பட்ட வாகனங்களை அடையாளம் கண்டு, சம்பந்தப்பட்ட வாகனங்களின் மீது வழக்குப் பதிவு செய்து அபராதமாக ரூ.500 வசூலித்தனர்.

 

Advertisement