தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடுமலை- சின்னார் செக்போஸ்ட் எஸ் பெண்டில் சிக்கி தவித்த வாகனங்கள்

உடுமலை : உடுமலை- சின்னார் செக்போஸ்ட் இடையே உள்ள எஸ் பெண்டில் நேற்று போக்குவரத்து நெரிசல் அதிமாக இருந்தததால் வாகனங்கள் சிக்கி தவித்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர், மறையூர் மற்றும் மூணார் உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

Advertisement

குறிப்பாக தமிழக அரசு பேருந்துகளும், கேரள அரசு பேருந்துகளும், சுற்றுலா வாகனங்களும், இரு மாநில எல்லைப்பகுதியில் அமைந்துள்ள மலைக்கிராம மக்களை ஏற்றிச் செல்லும் ஜீப்களும், அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் என நாள்தோறும் நூற்றுக்கணக்கில் பயணிக்கின்றன.

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியை ஒட்டி செல்கின்ற இந்த சாலை சுமார் 13 கி.மீ தொலைவிற்கு தமிழக எல்லையான சின்னார் செக் போஸ்ட் வரை மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது.

ஏழுமலையான் கோவில், கோடந்தூர் மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி உடுமலை, மடத்துக்குளம், திண்டுக்கல், பழனி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த வழித்தடத்தில் தான் பயணிக்கின்றனர்.

இது தவிர கல்லூரி மாணவர்கள், டிரக்கிங் செல்பவர்கள், இயற்கை நல ஆர்வலர்கள் பலரும் அவ்வப்போது இருசக்கர வாகனங்களில் தமிழகத்தில் இருந்து 9/6 செக்போஸ்ட் வழியே கேரளா சென்று வருகின்றனர்.

இந்த வழித்தடத்தில் கேரள மாநில எல்லைக்கு பிறகு சாலை வசதி நன்றாக இருப்பதாக கூறும் வாகன ஓட்டிகள் தமிழக எல்லைக்குள் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் ஆப்ரோடு கண்டிசனில் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.புதிதாக சாலை விரிவாக்கம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. மேடும், பள்ளமுமாக உள்ள சாலையை சமமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

எதிரே வருகின்ற வாகனங்களுக்கு வழி விடுவதற்காக சாலையை விட்டு இறங்கினால் மீண்டும் சாலையில் ஏறமுடியாத அளவிற்கு சாலைகள் மிக உயரமாக உள்ளதால் வாகனஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.

குறிப்பாக கொண்டை ஊசி வளைவு, எஸ் பெண்டு பகுதிகளில் சாலையை விட்டு இறங்கினால் மீண்டும் வாகனங்கள் சாலையில் ஏற முற்படும் போது டயர்கள் வெடித்து விபத்து ஏற்படும் அபாய சூழல் ஏற்படுகிறது. அதன்படி நேற்றும் எஸ் பெண்டில் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்தன.

மலை வழிப்பாதை என்பதால் மிகவும் குறுகலான இந்த சாலையில் வாரவிடுமுறை தினங்களில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தார் ரோட்டில் இருந்து மண்ரோடு ஒரு அடி முதல் ஒன்றரை அடி தாழ்வாக அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தை போல தமிழகத்திலும் மலைவழிப்பாதையை அகலப்படுத்தி சீரமைத்தால் வணிக பயன்பாட்டிற்கும், சுற்றுலா பயன்பாட்டிற்கும் ஏற்ற நிலையில் அமையும் பொருட்டு கூடுதல் வருவாய் கிடைக்கும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement