தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாகனங்களை வழிமறித்து தாக்குதல் மணிப்பூரில் துப்பாக்கிச் சூடு 2 பாதுகாப்பு வீரர்கள் பலி: ஏராளமான வீரர்கள் காயம்

நம்போல்: மணிப்பூர் மாநிலத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 2 வீரர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் இன வன்முறையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அங்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இருப்பினும் அங்கு இன்று வரை வன்முறை குறையவில்லை.

Advertisement

பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ள நம்போல் சபால் லெய்கை அருகே நேற்று மாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அசாம் ரைபிள்ஸ் படையினர் 33 பேர் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் அசாம் ரைபிள்ஸ் படையினர் 2 பேர் கொல்லப்பட்டனர். பல வீரர்கள் காயமடைந்தனர். அசாம் ரைபிள்ஸ் படையினர் வாகனங்களில் இம்பாலில் இருந்து பிஷ்ணுபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மாலை 5.50 மணியளவில் இந்தத் தாக்குதல் நடந்தது.

வாகனங்களை சுற்றி வளைத்து மர்ம கும்பல் சரமாரியாக துப்பாகிச்சூடு நடத்தியது தெரிய வந்துள்ளது. இதில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளார். மணிப்பூர் முன்னாள் முதல்வர் என் பிரேன் சிங் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். அவர் கூறுகையில்,’ வீரர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். ’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement