தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேடசந்தூரில் போதையில் வடமாநில வாலிபர் அட்ராசிட்டி: எச்சரித்து அனுப்பி வைத்த போலீசார்

வேடசந்தூர்: வேடசந்தூரில் போதையில் டூவீலர்களை அடித்து நொறுக்கி, தரையில் உருண்டு புரண்டு அட்ராசிட்டி செய்த வடமாநில வாலிபரை, போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலை மற்றும் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், வடமாநில வாலிபர் ஒருவர் மதுபோதையில் தள்ளாடியபடி நேற்று மாலை வேடசந்தூர் ஆத்துமேட்டு பகுதிக்கு வந்தார். அங்கு நிறுத்தி வைத்திருந்த டூவீலர்களை அடித்து நொறுக்கியும், அச்சுறுத்தியும் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே கை, கால்களை கட்டிப்போட்டதால், வடமாநில வாலிபர் தரையில் உருண்டு பாம்பு போல நெளிந்து அட்ராசிட்டியில் ஈடுபட்டார். சம்பவ இடத்துக்கு வந்த வேடசந்தூர் போலீசார் போதை வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

இதில், அந்த வாலிபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் (27) என்பதும், தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறால், அளவுக்கு அதிகமாக மது அருந்தி ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து ராகுலை எச்சரித்த போலீசார், அவருடன் வேலை பார்க்கும் நண்பர்களை வரவழைத்து, ஆட்டோவில் அனுப்பி வைத்தனர். மேலும், நாளை (இன்று) காவல்நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement