தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி உபகரணங்கள் பறிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்

கீழ்வேளூர்: நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அடுத்த செருதூர் மீனவ கிராமத்திலிருந்து கடந்த 10ம்தேதி 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் 3 பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வேதாரண்யத்திற்கு தென்கிழக்கே சுமார் 15 நாட்டிக்கல் கடல்மைல் தூரத்தில் மறுநாள் 11ம்தேதி இரவு 10.30 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது அந்த வழியாக பைபர் ஸ்பீடு படகில் வந்த தமிழ் பேசக்கூடிய 4 இலங்கை கடற்கொள்ளையர்கள் முருகையன், வெண்ணிலா, தேவி ஆகியோருக்கு சொந்தமான 3 பைபர் படகுகளை சுற்றிவளைத்து ஏறியதோடு, மீனவர்கள் மீது இரும்பு பைப், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி மீனவர்களிடமிருந்து மொபைல் போன்கள், ஜி.பி.எஸ் கருவிகள், இஞ்சின், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட ரூ.9லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்றனர்.

இந்த தாக்குதலில் 3 படகில் இருந்த 12 மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் காரங்காட்டை சேர்ந்த அந்தோணி பிச்சை (39), செருதூர் தமிழழகன் (26), வீரமணி (54), ராஜவேல் (23), பாலகிருஷ்ணன் (49), இடும்பன் (47), கணேசன் (55) ஆகிய 7 பேர் காயம் அடைந்தனர். நேற்று காலை 8 மணி அளவில் மீனவர்கள் கரை திரும்பினர்.

காயம் அடைந்த 7 பேர் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து மீனவ பஞ்சாயத்தார் மற்றும் கடலோர காவல் படையினரிடம் புகார் கொடுத்தனர். இதுகுறித்து கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement