தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் அருகே கடலில் மிதந்த இலங்கை படகு

Advertisement

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சிறுதலைக்காடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராமானுஜம்(50). இவர் தனக்கு சொந்தமான படகில் நேற்று அதிகாலை 4 மணியளவில் மீன் பிடிக்க, அதே ஊரை சேர்ந்த லெட்சுமணன்(30), ராஜதுரை(28), ராமநாதன்(38), புகழ்ராஜ்(28), ராம பெருமாள்(26), ராமன்(26), பன்னாள் சக்கரம் பேட்டையை சேர்ந்த பாக்கியராஜ்(26) ஆகியோருடன் கடலுக்கு சென்றார்.

சிறுதலைக் காட்டு மீனவ கிராமத்திற்கு தெற்கே கடலில் அவர்கள் நேற்று மதியம் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது கவிழ்ந்த நிலையில் ஒரு பைபர் படகு மிதந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அந்த படகை, தங்களது படகில் கட்டி நள்ளிரவில் கரைக்கு இழுத்து வந்தனர். இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்

போலீசார் படகை கைப்பற்றி சோதனை செய்ததில், அந்த படகில் டிஆர்பி-ஏ-1260 ஜெஎப்என் என்று எழுதப்பட்டுள்ளது. படகில் எழுதப்பட்ட படகு எண் மற்றும் படகின் தோற்றம் இலங்கையை சேர்ந்த படகு என தெரிய வந்தது. மேலும் இந்த படகு கரை ஓரத்தில் மீன் பிடிக்க பயன்படுத்தும் படகு என தெரிகிறது. இந்தப் படகு போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தியதா அல்லது வேறு யாரும் இலங்கையில் இருந்து தப்பி வந்தார்களா, கரையில் இருந்த போது காற்றின் வேகத்தில் இங்கு கரை ஒதுங்கியதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Related News