தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதாரண்யம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!!

நாகை: நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நிகழ்திருக்கிறார்கள். வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் 5 படகுகளில் நேற்று மதியம் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகில் தனி தனியே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை சேர்ந்த படகில் வந்த மூன்று பேர் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, ராஜகோபால், தங்கநாதன், சுரேஷ், சகாதேவன் ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளிலும் தனி தனியே கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர்.

Advertisement

அவர்கள் படகில் இருந்த 7 செல்போன், ஜிபிஎஸ் கருவி, 150 லிட்டர் டீசல் உள்ளிட்ட 4 லட்சம் மதிப்பிளான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மீன்பிடி உபகரங்களை பறிகொடுத்த புஷ்பவனம் மீனவர்கள் வெறும் கையுடன் கரைக்கு திரும்பினார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் 21 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களை தாக்கி 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் மற்றும் கிராமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement