தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 11 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் நடைபெறும் 11 நாள் சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். திருக்கழுக்குன்றத்தில் பட்சி தீர்த்தம் என அழைக்கப்படும் மலைமேல் வீற்றிருக்கும் வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் 11 நாட்களுக்கு சித்திரை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை வருடப் பிறப்பான இன்று காலை வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் 11 நாள் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
Advertisement

முன்னதாக, வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, இன்று காலை கொடிமரத்தில் சித்திரை திருவிழா கொடியேற்றப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயல் அலுவலர் புவியரசு, கோயில் மேலாளர் விஜயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். இதன் 3ம் நாள் உற்சவமாக, வரும் 16ம் தேதி 63 நாயன்மார்களின் வீதியுலா நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு, மலைக்கோயிலை சுற்றிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

Advertisement