தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடலூரில் விசிக நிர்வாகியும் ஊராட்சி மன்றத் தலைவருமான சுபாஷ் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடலூர் மாவட்டம் கீழ் அருங்குணம் ஊராட்சிமன்ற தலைவராக இருந்தவர் சுபாஷ். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் சுபாஷ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Advertisement

இந்த விசாரணையில் தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக தெரியவந்தது. அதே ஊரை சேர்ந்த தாமோதரன் என்பவருக்கும் சுபாஷ்க்கும் உள்ளாட்சிமன்ற தேர்தலின் போது முன்விரோதம் இருந்த காரணத்தினால் தாமோதரன் தோல்வியடைந்ததை அடுத்து இந்த படுகொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த கொலை வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மராஜ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தற்போது 10 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், வழக்கறிஞர் உள்பட 10 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை கேட்ட குற்றவாளியின் உறவினர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே கதறி அழுதனர். இதன் காரணமாக கடலூர் நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisement

Related News