தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வருசநாடு பகுதியில் சூறைக்காற்றுக்கு தென்னை, பப்பாளி மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை

வருசநாடு: வருசநாடு அருகே நேற்று முன் தினம் மாலை சூறைக்காற்று வீசியதால் தென்னை, பப்பாளி மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ளது காமன்கல்லூர் மலைக்கிராமம். இந்த பகுதியில் நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மரங்கள் ஆட்டம் கண்டன. சாலையில் நடந்து செல்வோரை கீழே தள்ளிவிடும் அளவிற்கு பலத்த காற்று வீசியதாக கிராம மக்கள் கூறினர். இதனால் காமன்கல்லூர் மலைக்கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் தோப்புகளில் தென்னை மரங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல, பப்பாளி மரங்களும், பல்வேறு மரங்களின் கிளைகளும் உடைந்து சேதமடைந்தன. 2வது நாளாக இன்றும் பலத்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் இந்த பகுதியில் இளநீர், காய்களுடன் கூடிய ெதன்னை மரங்களும், பப்பாளி மரங்களும் அதிகளவில் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related News