தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் தூர்வாரும் பணிகள் வேகமெடுக்குமா?

வருசநாடு : வருசநாடு கிராமத்தில் 64.5 ஏக்கர் பரப்பளவில் பஞ்சந்தாங்கி கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாயின் பெரும் பகுதியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் கண்மாயில் நீர் தேக்கி வைக்க முடியாமல் வருசநாடு பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடிக்கடி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது.
Advertisement

இதைடுத்து வருசநாடு பகுதி விவசாயிகள் தொடர் போராட்டம் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்மாயில் இருந்த தனிநபர்கள் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டது.

இதையடுத்து கண்மாயை ஆழப்படுத்தி கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக வருசநாடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் கண்மாயில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றது.இதில் முதற்கட்டமாக கண்மாய் கரைகள் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

அதன் பின்னர் சில காரணங்களால் கண்மாய் தூர்வரப்படாமல் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வரை தூர்வாரும் பணிகள் தொடங்கவில்லை. இதனால் கண்மாயில் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதில் நீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.

மேலும் தூர்வாரப்படாத காரணத்தால் கண்மாயில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடைபெறும் அபாயம் உள்ளது. எனவே தேனி மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கண்மாய்க்கான நீர் வரத்து வாய்க்கால்களையும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News