தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வானூர் அருகே பரபரப்பு பள்ளி வாயில் கேட்டை மூடியதால் மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

*போலீசார் சமாதானம்

Advertisement

வானூர் : வானூர் தாலுகா குன்னம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு செல்வதற்கு இரு பகுதிகளில் நுழைவு வாயில் உள்ளது.

தற்போது பின்புறம் உள்ள நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அந்த வழியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் இதை கண்டித்து அங்கேயே நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வானூர் இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தியிடமும் விளக்கம் கேட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பேசிய தலைமை ஆசிரியர் பள்ளிக்கு பிரதான வாயில் திறக்கப்பட்டுள்ளது. மற்றொரு வாயில் வழியில் தற்போது பெய்துள்ள மழையால் மழைநீர் அதிகமாக செல்கிறது.

எனவே அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் வந்தால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்த கேட் தற்காலிகமாக பூட்டு போட்டு மூடப்பட்டுள்ளது என்று கூறினார். இருப்பினும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி நேரங்களில் கேட்டை திறந்து வைப்பதற்கு ஒப்புதல் தெரிவித்தார். அதை அடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.

Advertisement