தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

Advertisement

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்ட யாதவ மகாசபை தலைவர் கலியுக கண்ணதாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் வன்னியர் சங்கம் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களுக்கு தமிழக அரசு சார்பில் 6 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் மார்பளவு வெண்கல சிலை விழுப்புரம் மாவட்டம் பார்வதிபுரத்தில் மணிமண்டபம் கட்டி அதில் அமைக்கப்பட உள்ளது. இந்த மணிமண்டபத்தை இம்மாத இறுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ளார்.

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்துபோன 21 பேரில் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கடமலைபுத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி மட்டும் யாதவர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், இடஒதுக்கீடு போராட்டத்தில் இறந்துபோனவர் பெயர் பட்டியலில் வன்னியர் என குறிப்பிடப்பட்டுள்ளது. திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு யாதவ மகாசபை வன்மையாக கண்டிக்கிறது. தற்போது நிறுவ இருக்கும் சிலையிலும் கல்வெட்டிலும் மணியின் பெயரை யாதவர் என குறிப்பிடவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Advertisement

Related News