தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையிலும் பள்ளத்தால் விபத்து அபாயம்

 

Advertisement

நெல்லை: வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் சேவை மையம் எதிரே காணப்படும் ராட்சத பள்ளத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் அவதிப்படும் வாகனஓட்டிகள் உள்ளிட்ட அனைத்துத்தரப்பினரும் விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையின் தொடக்கத்தில் தினமும் இரவு நேரங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்தது. அப்பகுதியில் மதுரை, சென்னை செல்லும் அரசு பஸ்களோடு, ஆம்னி பஸ்களும் அணிவகுத்து நின்றதால், பஸ் ஏற வருவோர் திண்டாட்டத்திற்கு உள்ளாயினர், மேலும் ஆம்னி பஸ்கள் அங்கேயே நின்று கொண்டு ஆட்களை ஏற்றுவதால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆம்னி பஸ்களை நிறுத்த வசதியாக வடக்கு பைபாஸ் சாலையை விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டது.

அதன்படி செல்லப்பாண்டியன் பாலம் இறக்கம் தொடங்கி, சிறிது தூரம் சாலை ஓரத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் அப்பகுதியில் நின்றிருந்த மரங்களையும் வெட்டி அகற்றினர். மரங்கள் தோண்டப்பட்ட இடங்களில் குழிகள் பெரியதாக காணப்பட்டன. வெயில் காலத்தில் அப்பள்ளங்கள் தெரியாத நிலையில் இருந்தன. இந்நிலையில் தற்போது மழை பெய்யும் நிலையில், மரத்தை பிடுங்கிய குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இது தெரியாமல் இருசக்கர வாகனங்களின் வருவோர் அக்குழிகளில் இறங்கி தவிக்கின்றனர். சேவை மையம் எதிரே காணப்படும் இந்த மெகா பள்ளத்தில் சிலர் வாகனங்களை இறக்கிவிட்டு வெளியேற சிரமப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றிய பகுதிகளில் சாலையை சீரமைத்து தரவேண்டும் என்பது பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Related News