தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாணியம்பாடியில் அதிகாலை மரகுடோனில் பயங்கர தீ விபத்து

வாணியம்பாடி: வாணியம்பாடியில் இன்று அதிகாலை மரகுடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் சம்பத்(45). இவர் வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் ஆலங்காயம்-வாணியம்பாடி சாலையில் மர குடோன் வைத்துள்ளார். இங்கு வீடுகளுக்கு தேவைப்படும் கதவு, ஜன்னல், கட்டில்,சோபா உள்ளிட்ட பொருட்களை செய்வதற்கு தேவையான தேக்கு, வேங்கை உள்ளிட்ட விலையுயர்ந்த மரங்களையும், கதவு, ஜன்னல் போன்றவற்றையும் சேமித்து வைத்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள், வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் மர குடோனில் இருந்த மரங்கள், பொருட்கள், இயந்திரங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இவற்றின் மதிப்பு ரூ. பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.இதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement