தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை: தேங்கியிருந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்

வேலூர்: விழுப்புரம், வாணியம்பாடி, கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவும் நிலையில், ஒரு சில இடங்களில் பாதிப்பும் ஏற்படுத்திருக்கிறது. வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் பெரியபேட்டை பாலாற்றின் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. கோட்டையில் இருந்து பெரியபேட்டை இணைக்கும் தரைப்பாலம் துண்டிக்கப்பட்டது. வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்க வந்த நோய்யாளிகளும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Advertisement

விழுப்புரம் மாற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு இரண்டு மணிநேரத்திற்கு கனமழை கொட்டி தீர்த்தது. விழுப்புரத்தில் புதிய பேருந்து நிலையத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். சிலமணி நேரங்களில் நகராட்சி ஊழியர்கள் பேருந்தில் தேங்கிய மழை நீரை அகற்றிய பின்னரே பயணிகள் நிம்மதி அடைந்தனர். கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் பெய்த கனமழையால் 15 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து அங்குள்ளவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கொரநாட்டு கருப்பூரில் பெய்த கனமழை காரணமாக 500 ஏக்கரில் நடவு செய்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அருகே மாதநாயக்கன்பட்டியில் பெய்த கனமழையால் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததது. இரவு நேரத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பழைய சுவரை அகற்றி புதிய சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை புறநகர் பெய்த கனமழை காரணமாக காட்டுப்பாக்கம் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி பள்ளி செல்லும் சிறார்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். கட்டுப்பாக்கம் ஊராட்சி நிறுவகம் தேங்கிய மழை நீர் துரிதமாக அகற்றவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News