தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாட்டம் பாஜ சார்பில் வரும் 7, 8ல் விழா: தமிழிசை பேட்டி

சென்னை: சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் தமிழக பாஜ தலைவர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது: வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு கொண்டாடப்பட வேண்டும் என்று சமீபத்தில் நடந்த ‘மன் கி பாத்’ நிகழ்வில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்காக நவ.7 மற்றும் 8ம் தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான விழாக்களை நடத்த இருக்கிறோம். வந்தே மாதரம் அச்சிடப்பட்ட அட்டைகள் வழங்கப்படும். சிறப்பு அழைப்பாளர்கள் இந்த பாடலின் முக்கியத்துவத்தை பற்றி பேசுவார்கள். இசையுடன் கூடிய பாடல் பாடப்படும். பாடலின் முடிவில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கப்படும். இந்த நிகழ்வில் நாங்கள் கட்சிக் கொடியை பயன்படுத்த போவதில்லை. தேசிய கொடியை பயன்படுத்த போகிறோம். அனைத்து கட்சியினரும் கலந்து கொள்ள வேண்டும். திமுகவினரும் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும். கன்னியாகுமரியில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொள்கிறார். சேலத்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், செஞ்சி கோட்டையில் சுதாகர் ரெட்டி, சிவகங்கையில் எச்.ராஜா, வேலூரில் நானும் கலந்து கொள்கிறேன். தமிழக அரசும் இதை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Related News