தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அலறல்

Advertisement

திண்டுக்கல்: திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. சில கிலோ மீட்டர் கடந்த நிலையில் வடமதுரை ரயில்நிலையத்திற்கு முன்பாக தாமரைப்பாடி கிராமப்பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்த போது இன்ஜினை அடுத்துள்ள பெட்டியில் இருந்து திடீரென புகை கிளம்பியது. தொடர்ந்து பெட்டி முழுவதும் புகை பரவ துவங்கியதால், அதிலிருந்த பயணிகள் அச்சமடைந்து அலறியடித்து கூச்சலிட்டனர். தகவலறிந்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பின்னர் புகை வந்த இடத்தில் சோதனை செய்தபோது ரயிலில் இருந்த ஏசி யூனிட்டில் இருந்து புகை கிளம்பியது தெரியவந்தது.

இதையடுத்து புகை வந்த பகுதியை லோகோ பைலட்கள் தற்காலிகமாக சரிசெய்தனர். மேலும், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அருகிலுள்ள பெட்டிக்கு மாற்றப்பட்டனர். இதுகுறித்து திண்டுக்கல், திருச்சி ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. புகை வருவது நின்றதையடுத்து வந்தே பாரத் ரயில் 30 நிமிடங்களுக்கு பிறகு அங்கிருந்து மெதுவான வேகத்தில் திருச்சி நோக்கி புறப்பட்டு சென்றது. திருச்சி ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ரயிலை ஆய்வு செய்தனர். அதன்பிறகு தொடர்ந்து வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Related News