தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே பாரத் ரயிலில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடிய விவகாரம் விசாரணை நடத்த கேரள கல்வித்துறை அமைச்சர் உத்தரவு

திருவனந்தபுரம்: எர்ணாகுளம்-பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மோடி காணொலி மூலம் இந்த ரயில் உள்பட 4 புதிய வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார். எர்ணாகுளம்-பெங்களூரு ரயில் தொடக்க விழாவில் பள்ளி மாணவர்கள் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை தென்னக ரயில்வே தங்களுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது.

Advertisement

இது சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக எக்ஸ் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. ரயில்வேயின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்பட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியது: வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவில் ஆர்எஸ்எஸ் பாடல் பாடிய விவகாரத்தில் மாணவர்களை குறை கூற முடியாது. அரசு நிகழ்ச்சிகளுக்கு ஒரு வரைமுறை உள்ளது. இதில் அரசியல் கட்சிகளின் பாடல்களை பாடக்கூடாது.

எந்தப் பள்ளியாக இருந்தாலும் மதவாதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள அனுமதிக்க முடியாது. மாநில அரசு தடையில்லா சான்றிதழ் வழங்கினால்தான் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அனுமதி கிடைக்கும். அரசின் நிபந்தனைகளை மீறினால் சான்றிதழை ரத்து செய்ய முடியும். இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய கல்வித் துறை அமைச்சரை நாளை (இன்று) சந்தித்து புகார் கூற தீர்மானித்துள்ளேன். அரசு நிகழ்ச்சிகள் ஆர்எஸ்எஸ் பாடல்களை பாடுவதற்கான மேடை அல்ல. இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement