தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாட்டின் முதல் வந்தே பாரத் பார்சல்' ரயில்: ஒரே நேரத்தில் 264 டன் சரக்குகளை ஏற்றலாம்

 

Advertisement

சென்னை : 'நாட்டின் முதல், 'வந்தே பாரத் பார்சல்' ரயில் தயாராகி விட்டது. ஓரிரு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். இதில், ஒரே நேரத்தில், 264 டன் சரக்குகளை ஏற்றிச் செல்லலாம்' என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும், 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே தொழில்நுட்பத்தை கொண்டு, சரக்குகளை எடுத்துச் செல்ல கூடுதல் சிறப்பு அம்சங்களுடன், 'வந்தே பாரத் பார்சல்' ரயில் தயாரிப்பு பணிகள், கடந்த ஓராண்டாக நடந்து வந்தன. ஒட்டுமொத்த தயாரிப்பு பணிகள், தற்போது முடிந்துள்ளன.

மொத்தம், 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ., வேகம் செல்லும் திறன் கொண்டது. உணவு பொருட்கள் பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதிகள் உள்ளன. இணையவழி வணிக நிறுவனங்கள், தங்களது பொருட்களை அனுப்புவதற்கு, தற்போது பெரிய அளவில் விமான போக்குவரத்தையே நம்பி உள்ளன. அவர்களின் வசதிக்காக, 'வந்தே பாரத் பார்சல்' ரயில் சேவையை துவங்க உள்ளோம்.

முதல் ரயில், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் ஓடத் துவங்கி விடும். முதல் கட்டமாக, மும்பை, டில்லி மண்டலங்களில் இயக்க திட்டமிட்டுள்ளோம். தனியார் நிறுவனங்கள், தங்களது பொருட்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் எடுத்துச் செல்ல முடியும். முதலில் வருவோருக்கும், நீண்ட கால ஒப்பந்தம் செய்வோருக்கும் சலுகைகள் அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News