தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில் ரவீந்திரநாத் தாக்கூரை மோடி அவமதித்து விட்டார்: காங். குற்றச்சாட்டு

புதுடெல்லி: வந்தே மாதரம் விவகாரத்தில் ரவீந்திரநாத் தாக்கூரை பிரதமர் மோடி அவமதித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், 1937ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலின் சில சரணங்களை நீக்கியது பிரிவினைக்கான விதைகளை விதைத்து என்ற பிரதமரின் கருத்துக்கள் அறியாமையையும் கருத்தியல் சார்பையும் காட்டி கொடுத்தது.

Advertisement

1937ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கொல்கத்தாவில் காந்தியின் தலைமையில் நடந்தது. இதில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று ரவீந்திரநாத் தாகூர் யோசனைப்படி தீர்மானிக்கப்பட்டது. குருதேவ் ரவீந்திரநாத் தாக்கூரை பிரதமர் அவமதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது, ஆனால் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்திய சுதந்திர இயக்கத்தில் ஆர்எஸ்எஸ் எந்த பங்கையும் வகிக்கவில்லை. ஒரு வேளை அதனால்தான் அதன் ஆதரவாளர்களால் அவ்வாறு செய்தவர்களின் கொள்கைகளை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. இதன் மூலம் ரவீந்திரநாத் தாக்கூரை மோடி அவமதித்துள்ளார். மோடி தனது அரசியல் சவால்களை திசை திருப்புகிறார் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement