தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கத்தின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல்.

Advertisement

வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், கடந்த 5 நாட்களாக 'ஷெரூ' என்ற ஆண் சிங்கம் காணாமல் போனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம் லயன் சஃபாரி பகுதியில் இருந்து மாயமானது குறித்து மிருகக்காட்சி சாலை நிர்வாகம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.

5 வயதுடைய சிங்கம், கடந்த புதன்கிழமை காலை 28 ஹெக்டேர் பரப்பளவுள்ள லயன் சஃபாரி பகுதிக்குள் விடப்பட்டது. ஆனால், வழக்கம்போல் மாலை உணவிற்காக அது தனது அடைப்பிடத்திற்குத் திரும்பவில்லை. ஆரம்பத்தில் ஒருசில நாட்கள் சுற்றிய பிறகு சிங்கம் திரும்பி வந்துவிடும் என்று அதிகாரிகள் இருந்த நிலையில், அதன் வருகை இல்லாதது தற்போது பூங்கா நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

சிங்கத்தைக் கண்டுபிடிக்க, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் அடர்ந்த சஃபாரி வனப்பகுதியை ட்ரோன்கள் மூலம் ஸ்கேன் செய்து தீவிரத் தேடுதல் பணியைத் தொடங்கியது. இந்நிலையில் காணாமல்போன சிங்கம் லயன் சபாரி என்ற பகுதியில் இருப்பது டிரோன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இரவில் வெப்ப இமேஜிங் டிரோன் கேமரா மூலம் தொடர்ந்து 5 பேர் கொண்ட குழு கண்காணித்து வருகிறது. லயன் சபாரி பகுதியில் இருந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

Related News