தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சார்-பதிவாளர் நியமிக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

Advertisement

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் பேருந்து நிலையம் எதிரே சார்-பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. செய்யூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தினமும் இங்கு நிலம், வீடு வாங்குதல், குத்தகை பத்திரம், கிரயம், தானம், செட்டில்மென்ட் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்கு இங்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பசுபதி என்பவர் சார்-பதிவாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த டிசம்பர் மாதம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது தலைமை எழுத்தர் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். அதன்பின், இங்கு புதிய சார்-பதிவாளர் நியமிக்கப்படவில்லை.

இதனால், பத்திர நகல், பிறப்பு, இறப்பு, ஈசி உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த அலுவலகத்திற்கு புதிதாக சார்-பதிவாளரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பத்திரப்பதிவு துறை அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி இங்கு புதிய சார்-பதிவாளரை நியமிக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement