தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வண்டலூர் அருகே துணிகரம் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் திருட்டு: மோப்பநாய்க்கு பயந்து மிளகாய்ப்பொடி தூவிச் சென்றனர்

கூடுவாஞ்சேரி: வேங்கடமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதில் மோப்பநாய் தங்களை கண்டுபிக்காமல் இருக்கும் வகையில் மர்மநபர்கள் வீட்டின் உள்ளே, வெளியே மிளகாய்ப்பொடி தூவிச் சென்றனர்.வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (38), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தரைத்தளத்திலும், அவருடைய அம்மா பிரேமா முதல் தளத்திலும் வசிக்கின்றனர்.
Advertisement

கடந்த 15ம் தேதி பிரசன்னா தனது குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை, முதல் தளத்தில் வசிக்கும் பிரசன்னாவின் அம்மா பிரேமா மாடியிலிருந்து கீழே இறங்கியுள்ளார். அப்போது, பிரசன்னாவின் வீட்டு முன்பக்க கேட் மற்றும் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த 25 சவரன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதில் மர்ம நபர்கள், தங்களை மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கும் வகையில் வீட்டில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து வீட்டின் உள்பக்கம் மற்றும் வெளிப்புறத்தில் தூவிச் சென்றுள்ளனர். உடனே பிரேமா தன் மகனுக்கு தகவல் தெரிவித்தார். பிரசன்னா தாழம்பூர் போலீசுக்கு செல்போன் மூலம் புகார் தெரிவித்தார். போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் வேங்கடமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News