தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வால்பாறையில் ரூ.2.9 கோடி மதிப்பில் ‘ஸ்மார்ட் வேலி’ அமைக்கும் பணி தீவிரம்

*மனித-வன விலங்கு மோதலை தடுக்க நடவடிக்கை
Advertisement

வால்பாறை : வால்பாறை பகுதியில் மனித-வன விலங்கு மோதலை தடுக்க வனத்துறையினர் ‘‘ஸ்மார்ட் வேலி’’ அமைத்து வருகின்றனர். கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி 2 வனப்பகுதிகள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் அதிகளவில் காணப்படுகிறது. மேலும், வனவில்ங்குகள் வனப்பகுத்யைவிட்டு வெளியேறி மனிதர்களை தாக்கி வருகிறது.இந்நிலையில், வால்பாறை பகுதிகளில் மனித-வன விலங்கு மோதலை தடுப்பதற்கு வனத்துறையினர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

மேலும், இயற்கை வேலி, பாதுகாப்பு சுவர், கம்பி வேலி, சோலார் வேலியை தொடர்ந்து தற்போது, ‘ஸ்மார்ட் வேலி’யை மக்களின் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அமைத்து வருகின்றனர். ஐஓடி தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பு தீர்வாக கருதப்படும் வேலிகள் வன விலங்குகளின் நடமாட்டதை அசாதாரண நேரங்களில் கண்டறிந்து செய்கை மூளை திறனை கொண்டு பகுத்தறிந்து, அச்சுறுத்தல் என பகுப்பாய்வு செய்து தகவல் தொடர்பு மின்னணு கருவிகளுக்கு தகவல் அளிக்கும்.

மேலும், அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய சென்சார்கள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி முன்னெச்சரிக்கையான பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கும் அலாரங்கள் அல்லது அறிவிப்புகள் போன்ற தானியங்கி கருவிகளை தானாக செயல்படுத்தி பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கும் என்றும், அதை கண்டறிந்து மனிதர்கள் எச்சரிக்கை அடைந்து, வனவிலங்கு குடியிருப்பு பகுதியில் புகுவதை தெரிந்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது.

வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரக பகுதியில் ரூ.2.9 கோடி மதிப்பீட்டில் டானி என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் விர்ச்சுவல் பென்சிங் சிஸ்டம் சூரிய சக்தியில் இயங்கும் மின்னணு கருவியாகும். மனித வசிப்பிடங்களுக்குள் நுழைய முயற்சிக்கும் எந்த ஒரு வன விலங்குகளின் ஊடுருவலைக் கண்டறிந்து, சிறப்பு சத்தம் கொண்டு அவற்றை விரட்டும் என வனச்சரகர் வெங்கடேஷ் தெரிவித்தார். வால்பாறை பகுதியில் சுமார் 1300 இடங்களில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், மனித-வன விலங்கு மோதலை தடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

Advertisement