தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலன்சியா மாரத்தான் முதலிடம் பிடித்த ஜாய்சிலின், ஜான்: கென்ய வீரர், வீராங்கனை சாதனை

வாலன்சியா: ஸ்பெயினில் நடந்த மாரத்தான் தொலை தூர ஓட்டப் போட்டியில் கென்யாவை சேர்ந்த ஜான் கொரிர், ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். ஸ்பெயினின் வாலன்சியா நகரில், வாலன்சியா மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இப்போட்டியில் ஆடவர் பிரிவில் கென்யாவின் ஜான் கொரிர் (27), 2 மணி 2:24 நிமிடத்தில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இந்தாண்டில் அவர் வெல்லும் 2வது மாரத்தான் சாம்பியன் பட்டம் இது. அவருக்கு அடுத்ததாக, ஜெர்மனியின் அமனல் பெட்ரோஸ், 2 மணி 4:03 நிமிடங்களில் வந்து 2ம் இடம் பிடித்தார். இது, ஜெர்மனி நாட்டின் தேசிய சாதனையாக அமைந்தது.

Advertisement

நார்வே நாட்டின் அவெட் கிப்ராப், 2 மணி 4:24 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து 3ம் இடத்தை பிடித்தார். முதலிடம் பிடித்த ஜான் கொரிர், மாரத்தான் ஓட்ட வரலாற்றில் 8வது மிகக் குறைந்த நேரத்தில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். மகளிர் பிரிவிலும், கென்யாவே சாதனை படைத்து அசத்தியுள்ளது. மகளிர் பிரிவு மாரத்தானில் கென்ய வீராங்கனை ஜாய்சிலின் ஜெப்கோஸ்கெய் (32), 2 மணி 14:00 நிமிடங்களில் போட்டி தூரத்தை கடந்து சாதனை படைத்தார். இந்தாண்டில் நடந்த மாரத்தான் போட்டிகளில் இதுவே சாதனை ஓட்டமாக அமைந்துள்ளது. உலகளவில் மாரத்தான் வரலாற்றில், மகளிர் பிரிவில், ஜாய்சிலின் சாதனை, 4வது இடத்தை பிடித்துள்ளது.

Advertisement

Related News