தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வலங்கைமான் தாலுகாவில் 98 சதவீதம் சம்பா நடவு பணி முடிந்துள்ளது

வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் 98 சதவீதம் சம்பா நடவு பணிகளும் 50 சதவீதம் தாளடி நடவு பணிகளும் நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திற்குள் தாளடி நடவு பணிகள் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

வலங்கைமான் தாலுகாவில் உள்ள 71 வருவாய் கிராமங்கள் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் முக்கிய பாசன வடிகால் ஆறான சுள்ளன் ஆறு மூலம் பாசன வசதி பெறுகின்றது. நடப்பாண்டு சுமார் 20 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் நேரடி விதைப்பு மூலம் சுமார் 20 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் இயந்திர நடவு மூலம் சுமார் 40 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் வழக்கமான விதை விட்டு கை நடவு மூலம் சுமார் 40 சதவீத ஹெக்டேர் நிலப்பரப்பும் சாகுபடி மேற்கொள்ளபட்டது.

வலங்கைமான் தாலுக்காவில் நடப்பு சம்பா பட்டதில் சாகுபடி முன்னதாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் நெல் நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் விதை விடும் பணி முன்னதாக முடிவு பெற்றதை அடுத்து தற்போது வரை 98 சதவீத அளவு பரப்பளவில் சம்பா நடவு மேற்கொள்ளப் பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நீண்டகால நெல் ரகத்தினை விவசாயிகள் நடவு செய்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இயந்திர நடவுக்கு நிகராக நடவு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் நமது பகுதிகளில் வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாலும் ஆட்கள் பற்றாக்குறை தவிர்க்கும் வகையிலும் வட மாநில தொழிலாளர்களை விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர்.

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4500 என்ற சொற்பத்தொகையில் நடவு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இம் மாதத்திற்குள்ளாக சாம்பா நடவுப் பணிகள் வலங்கைமான் தாலுகாவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதுவரை தாளடி சுமார் 50% அளவு நடைபெற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் 15 தேதிக்குள்ளாக தாளடி நடவு பணிகள் முடிவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வலங்கைமான் தாலுகாவில் வழக்கத்தை விட முன்னதாகவே சம்பா மற்றும் தாளடி முன்னதாகவே நடவு பணிகள் முடிவு பெறுகிறது.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதை அடுத்து கை நடவு மற்றும் இயந்திர இயந்திரநடவு மூலம் 80 சதவீத பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisement

Related News