தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்’ - டெல்லி காற்று மாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “சுற்றுச்சூழலை பாதிக்கும்படி வைக்கோலை எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். பட்டாசுகளை வெடிப்பதாலும், வைக்கோலை எரிப்பதாலும் தலைநகர் டெல்லியின் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, வைக்கோலை எரிக்கும் விவசாயிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் நீதிபதி பி.ஆர்.கவாய், "சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விவசாயிகள் சிலர் வைக்கோல்களை எரிப்பதை எப்படி ஏற்பது?.

Advertisement

சுற்றுச்சூழலை பாதிப்பது விவசாயிகள் என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்களில் சிலரை சிறையில் வைத்தால், அது சரியான செய்தியை அனுப்பும்."என தெரிவித்தார். அத்துடன் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் காலிப் பணியிடங்கள் விரைவாக நிரப்பப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Related News