வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
Advertisement
வரும் 19ம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினமாகும். இதை முன்னிட்டு அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் காலையில் நெய்யபிஷேகமும் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். வைகாசி மாத பூஜைகளும், பிரதிஷ்டை தினமும் சேர்ந்து வருவதால் சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement