தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு

லக்னோ: உத்தர பிரதேசம் சோன்பத்ராவில் உள்ள கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 15 தொழிலாளர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். பாறைகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

சோன்பத்ராவின் டலா பகுதியில் உள்ள மலைச் சரிவில் இருந்து ஒரு பெரிய பாறை திடீரென உடைந்து, கீழே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்து நடந்தபோது சுமார் 15 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாகவும், உடனடியாக அவர்களால் அங்கிருந்து தப்பிக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய ஒரு தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது

குவாரி தளத்தில் தொழிலாளர்கள் கம்ப்ரஷன் இயந்திரங்களைப் பயன்படுத்தி பாறையில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேலிருந்த பாறையின் பெரிய பகுதி திடீரென விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும்விரைந்துள்ளனர்.

Advertisement

Related News