தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்ட் நிலச்சரிவின் மீட்பு பணியில் தாயின் மார்பை அணைத்தபடி இரட்டை குழந்தைகளின் சடலம் மீட்பு: காண்போர் நெஞ்சை பதறவைத்த சோகம்

சமோலி: உத்தரகாண்ட் நிலச்சரிவில் இறுதி நிமிடம் வரை தன் பிள்ளைகளை காக்க போராடிய தாயின் பாசப்போராட்டம் சோகத்தில் முடிந்தது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் நந்தநகர் பகுதியில் கடந்த 17ம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த கோர சம்பவத்தில் பல வீடுகள் இடிபாடுகளில் புதைந்தன. இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்ற நிலையில், இடிபாடுகளில் இருந்து தாய் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியுள்ளது.

Advertisement

மாயமானவர்களை தேடும் பணியின் போது, தாய் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் உடல்கள் ஒன்றாக மீட்கப்பட்ட காட்சி காண்போரை கலங்கடித்துள்ளது. மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றியபோது, 38 வயதான காந்தா தேவி என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் தனது 10 வயது இரட்டை மகன்களான விஷால் மற்றும் விகாஸ் ஆகிய இருவரையும் தனது மார்போடு இறுக்க அணைத்தபடி இறந்து கிடந்தார். ‘இறுதி நிமிடம் வரை தன் குழந்தைகளை காப்பாற்ற அந்த தாய் போராடியிருக்கலாம்’ என்பதைப் போல அந்த காட்சி அமைந்திருந்தது.

இதே இடிபாடுகளில் சிக்கியிருந்த காந்தா தேவியின் கணவர் குன்வர் சிங், 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கடந்த 18ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால், தனது மனைவி மற்றும் குழந்தைகள் உயிரிழந்த செய்தி கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். தனது மொத்த குடும்பத்தையும் ஒரே நாளில் இழந்த சோகத்தில் அவர் மூழ்கியுள்ளார். இந்த துயர சம்பவம் நந்தநகர் பகுதி மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உத்தரகாண்ட்டையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Related News