தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு: கடும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு!

உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் ஏற்பட்ட மேகவெடிப்பு மற்றும் வெள்ளப் பெருக்கால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழையால் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. திங்கட்கிழமை காலை முதலே கனமழை பெய்து வந்த நிலையில், இரவில் டேராடூனில் மேகவெடிப்பால் வானத்தில் இருந்து அருவி போல் மழை கொட்டியது. இதன் காரணமாக தம்சா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரத்தில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோயிலைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்தது. இதே போன்று, நிலச்சரிவால் வீடுகள் மற்றும் சாலைகளும் பலத்த சேதமடைந்தன.

Advertisement

டேராடூனில் நேற்று அதிகாலை ஒரு பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் 5 பேர் பலியாகினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பேரிடர் மீட்பு படை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், டேராடூன் மற்றும் சுற்றுப்பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.

டேராடூன் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டு நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தரகாண்டில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியிடம் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்து, மாநிலத்துக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.

Advertisement

Related News