தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து கொண்டு அங்கிருந்து உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்ற பிரதமர் இன்று பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து 4 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பனாரஸ் -கஜூராவி வழித்தடம், லக்னோ -சஹாரன்பூர், ஃபிரோஸ்பூர் - டெல்லி இடையிலும் தென்னிந்தியாவின் எர்ணாகுளம்- பெங்களூரு இடையிலான 4 வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

Advertisement

தென்னிந்தியாவை பொறுத்தவரை எர்ணாகுளம்- பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையின் மூலம் பயண நேரம் சுமார் 2 மணி நேரம் வரை குறைகிறது. எர்ணாகுளத்திலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு செல்லகூடிய வந்தே பாரத் ரயில் சுமார் 8 மணி நேரம் 40 நிமிடங்களில் பயணத்தை நிறைவு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ரயில் சேவை மூலம் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பயன்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று துவங்கப்பட்ட வந்தே பாரத் ரயில் சேவை மூலம் பயணிகளின் பயண நேரம் குறைவதோடு பிராந்திய போக்குவரத்து சேவைகளை மேம்படுத்தவும், சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை நாடு முழுவதும் ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. எர்ணாகுளத்திலிருந்து தமிழகம் வழியாக பெங்களூரு செல்லகூடிய வந்தே பாரத் ரயில் சேவையை தவிர பனாரஸ் -கஜூராவி இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள சிறப்பு ரயில்களோடு ஒப்பிடுகையில் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் வரை பயண நேரத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய வந்தே பாரத் ரயில் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த வாரணாசி, பிரயாஜ்ராத், சித்திரப்பூர் மற்றும் கஜூராவி உள்ளிட்ட மதம் மற்றும் கலாச்சார தலங்களை இணைக்கும் வகையில் இந்த வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை துவங்கி வைத்து பிரதமர் மோடி அங்குள்ள பொதுமக்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.

 

Advertisement

Related News