உத்தரப்பிரதேசத்தில் ஜலாலாபாத் நகரத்தின் பெயரை பரசுராம்புரி என பெயர் மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல்..!!
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஜலாலாபாத் நகரத்தின் பெயரை பரசுராம்புரி என பெயர் மாற்ற ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஜலாலாபாத் நகரம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ளது. விஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராம், ஜலாலாபாத் நகரில் பிறந்ததாக நம்பப்படுகிறது.
ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஜலாலாபாத் நகரம் தெய்வீகம் சார்ந்தது என்றும் அங்கு பரசுராமர் கோவில் இருப்பதாகவும் மாநில அரசின் தலைமைச்செயலாளர் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அக்கடிதத்தில் ஜலாலாபாத் நகரத்தின் பெயரை பரசுராம்புரி என பெயர் மாற்ற ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் இத்தகைய பெயர் மாற்றத்திற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்து ஜலாலாபாத் என்ற நகரத்தின் பெயரை பரசுராம்புரி என மாற்றப்பட்டதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது.