தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தமபாளையம் பகுதியில் நெற்பயிரில் புகையான் தாக்குதல்

*தடுக்க வேளாண் துறையினர் ஆலோசனை

Advertisement

உத்தமபாளையம் : உத்தமபாளையம் பகுதிகளில், நெற்பயிர்களில் புகையான் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

உத்தமபாளையம், ராயப்பன்பட்டி, ஆனைமலையன் பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி,உள்ளிட்ட இடங்களில் தற்போது குறுவை நெல் சாகுபடி சுமார் 500 ஹெக்டேர் நிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போதைய பருவநிலை மாற்றத்தின் காரணமாக நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தண்டுப்பகுதியில் பூச்சி தாக்கினால் இதன் சாறு உறிஞ்சப்பட்டு விளைச்சல் குறைந்தால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. பயிர் வட்ட வட்டமாக காய்ந்து விடும்.இதனை தடுப்பது குறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது: வயலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். பூச்சி தாக்குதல் உள்ள வயலில் காற்றோட்டம் ஏற்படுத்தி ஒதுக்கி விட வேண்டும்.

இதே போல் பூச்சி மருந்தாக, டினோட்டி பியூரான் 20 சதவீதம் 50 கிராம் ஏக்கருக்கும், தயோ மீத்தாக்சம் 25 சதவீதம் 200 கிராம் ஏக்கருக்கும், பிப்ரோனில் 5 சதவீதம் 20 கிராம் ஏக்கருக்கும் அசிடேட் பிப்ரோபிசின் 350 கிராம் ஏக்கருக்கும் பயன்படுத்தலாம். இது குறித்து விபரம் அறிய உத்தமபாளையம் வேளாண்மை துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Related News