தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 7500 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்: ரூ.15,000 அபராதம் வசூல்

 

Advertisement

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதிகளில் உள்ள பெரும்பாலான கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவந்தது. இதை பயன்படுத்தக்கூடாது எனபேரூராட்சி சார்பில் பல முறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், அவற்றை தடுக்க வேண்டும் என்றும் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கவேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் உத்தரவிட்டார்.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பா.செல்வஇளவரசி தலைமையில்சுற்றுச்சூழல் உதவி பொறியாளர்கள் நேற்று ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்தினர். பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த ஓட்டல்கள், பேக்கரிகள் , மளிகைகடை அவர்களின் குடோன்களில் சோதனை செய்து 7500 கிலோ பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து வியாபாரிகளிடம் ரூ.15 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். ‘’ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் அபராதம் இரட்டிப்பாகும். அத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Related News