தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஊத்தங்கரை அருகே பச்சை கத்தரிக்காய் விலை வீழ்ச்சி

*கிலோ ரூ.10க்கு விற்பனை

*விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை : ஊத்தங்கரை அருகே கானம்பட்டியில், பச்சை கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள மாரம்பட்டி, கானம்பட்டி, கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பாம்பாறு அணை பாசனத்தில் கத்தரிக்காய் சாகுபடி பிரதானமாக உள்ளது.

குறிப்பாக சுமார் 100 ஏக்கருக்கு மேல் பச்சை கத்தரிக்காய் பயிரிடுவது வழக்கம். 6 மாதம் பராமரிப்பதன் மூலம் பச்சை கத்தரிக்காய் விளைச்சலுக்கு தயாராகும். சாகுபடி செலவாக ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும் தேவைப்படும். இந்தாண்டும் பரவலாக பச்சை கத்தரிக்காய் சாகுபடி செய்து காய்களை பறித்து வருகின்றனர். இங்கிருந்து சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் விற்பனையாவதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர். கடந்தாண்டு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இவ்வளவு குறைவான விலையை விவசாயிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை.

எனவே, கத்தரிக்காய் சாகுபடியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயி செல்வம் கூறுகையில்: இவ்வளவு குறைவான விலைக்கு எப்போதும் கத்தரிக்காய் விற்பனையானதில்லை. எனவே, வேளாண்மைத்துறையினர் ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.