தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்க வரிவிதிப்பு விவகாரம் ஒன்றிய அரசுடன் எடப்பாடி பேசி சுமுக முடிவெடுத்திருக்கலாம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி

 

Advertisement

திருப்பூர்: அமெரிக்க வரிவிதிப்பு குறித்து திமுக அரசை குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க வேண்டிய ஒன்றிய அரசுடன் பேசி சுமுக முடிவெடுத்திருக்கலாம் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் பிரசாரம் மேற்கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க வரி விவகாரத்தில் திருப்பூர் தொழில்துறையினரை திமுக அரசு கைவிட்டதாக பேசியிருந்தார். இதற்கு திருப்பூரில் நேற்று பேட்டியளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் அமெரிக்க வரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் இருமுறை ஒன்றிய அரசின் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தோழமைக் கட்சி தலைவர்களை அழைத்து வந்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருப்பூரில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.‌ அமெரிக்க வரி விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டிய ஒன்றிய பாஜ அரசோடு கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமரிடம் பேசி சுமுக முடிவு எடுக்க வைத்திருக்கலாம். ஆனால் அதனை தவிர்த்து திமுக அரசை குற்றம் சாட்டி வருகிறார். திருப்பூரின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த பாலம் பணிகள், அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி அமைந்த பிறகு பாலப்பணிகள் சில முடிவுற்றும், சில நடைபெற்றும் வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement